சனி, 15 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1076


திருக்குறள் -சிறப்புரை :1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.-----0௭

கயவர்கள் தாம் கேட்டறிந்த கமுக்கச் செய்திகளைப் பல்லோருக்கும் எடுத்துரைப்பதால் அவர்கள் அடித்துமுழக்கும் செய்தி அறிவிக்கும் பறைக்கு ஒப்பானவர்கள்.

‘கணமலை நன்னாட கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.”  -----நாலடியார்.

கூட்டமாக மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டின் அரசனே..! எதிரிலிருந்து  ஒருவர் குணத்தையும் சொல்வதற்கு அருமையாயிருக்கும் அப்படியிருக்க, அவரிடத்திலிருந்து அவர்தம்  குணம் அழியும்படிக் குற்றங்களை எடுத்துச் சொல்கின்ற கயவரின் நாக்கு எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக