வெள்ளி, 7 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1069


திருக்குறள் -சிறப்புரை :1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். ---- ௧0௬௯

செல்வ வளம் உடையவர் முன் சென்று இரத்தலின் இழிவை நினைக்கும் பொழுதே உள்ளம் நைந்து உருகும் ; அந்நிலையில் இருப்பவர் இல்லை எனக் கைவிரித்தபோது அந்த மனம் உடைந்து சிதறி அழியும்.

“இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துகதில்ல யாய் ஓம்பிய நலனே.” –அகநானூறு.

ஒரு பொருளும் இல்லாது இரந்து வந்தவர்க்கு அவர் வேண்டுவதொன்றைக் கொடாது ஈட்டியவன் பொருள் பிறரால் அறியப்படாது அழிந்து போவதுபோல, என் தாய் பாதுகாத்த என் மேனி அழகும் பிறர் அறிய வெளிப்படாது அழிந்து ஒழிந்து போவதாக. ---பரத்தை கூற்று,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக