திங்கள், 10 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1072


திருக்குறள் -சிறப்புரை :1072

நன்றறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.------0

அறிவார்ந்து ஆராயும் சான்றோரைக் காட்டிலும் கயவர்கள் பேறு பெற்றவர்கள் ;  நன்மை தீமை ஆராய்ந்து ஒழுகும் அறிவின்மையால் அவர்கள் மனக்கவலை இல்லாதவர்கள்.

“” ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையராயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீதொழிலே கன்றித் திரிதந்து எருவை போல்
போத்து அறார் புல்லறிவினார்.’ –நாலடியார்.

நிறைந்த  அறிவுள்ளவர்கள் வயதில் இளையோராயினும் மனத்தாலும் பிறருக்குத் தீமை செய்யாமல் தம்மைக் காத்து அடக்கமுடன் நடந்து கொள்வர்.  சிற்றறிவு உடைய கயவர்கள், வயது முதிருந்தோறும் தீய செயல்களில் உழன்று வருந்திக் கழுகைப்போல் திரிந்து இழிவையே துய்ப்பர். (திருந்தாது குற்றம் புரிவார் என்பதாம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக