வியாழன், 6 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1068


திருக்குறள் -சிறப்புரை :1068

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். ------ ௧0௬௮

வறுமை நிலையைக் கடக்க இரத்தல் என்னும் பாதுகாப்பு இல்லாத தோணி, மறைத்துவைத்தல் என்னும் வலிய பாறையால் தாக்குண்டு சிதைந்து போகும்.

“தண்கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண…” ---   பெரும்பாணாற்றுப்படை.

ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல் சூழ் உலகில், மழை இல்லாமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் (பேணுநர்) பெறாமையால், பழம் கனிந்த மரத்தை நாடித் திரியும் பறவை போல, அழுது புலம்பும் சுற்றத்தினருடன் ஓரிடத்து இராமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும் கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயையும் உடைய பாணனே….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக