புதன், 19 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1080


திருக்குறள் -சிறப்புரை :1080

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. -----00

ஏதேனும் துன்பம் வந்து சேருமானால் கயவர், அத்துன்பத்தை எதிர்கொள்ளத் துணிவு கொள்ளாது, விரைந்து தம்மையே விலையாகக் கொடுத்துத் தப்பித்துக்கொள்ள முயல்வர். அஃதன்றி வேறு எத்தொழிலுக்கு உரியர் கயவர் ?
.கயவர் தன்மானம் காக்கும் தொழில் ஒன்றும் அறியார் என்பதாம்.

”கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம்  இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு உவக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம் விறன் மலை நாட
வேகுமாம் எள்ளுமாம் கீழ். ----நாலடியார்.

கடுஞ்சொற்கள் பேசுவதும் ; யாரிடத்தும் இரக்கம் கொள்ளாமையும் ; பிறருக்கு நேரிடும் துன்பங்களைக்கண்டு மகிழ்ச்சி அடைவதும் ; அடிக்கடி சினம் கொள்வதும்;  கண்டவிடத்தும் வீணே சுற்றித் திரிவதும் ; பிறரை எள்ளி நகையாடுவதும் கீழ் மக்களாகிய கயவர்தம் இயல்பாம் என்க.
----பொருட்பால்----
முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக