சனி, 8 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1070


திருக்குறள் -சிறப்புரை :1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். ----- ௧00

இரந்து நிற்பார்க்கு ’ஒன்றும் இல்லை போ’ , என்னும் சொல்லைக் கேட்டவுடனே இரந்தவன் உயிர் போய்விடுகின்றது ; இருப்பதை மறைத்தவர் உயிருடன் இருக்கிறார், மறைத்தவர் உடம்பில் இருக்கும் உயிர் எங்குசென்று ஒளிந்து கொள்ளுமோ..?

”புறத்துத் தன் இன்மை நலிய அகத்துள்
 நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
 ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அந்நிலையே
 மாயானோ மாற்றி விடின்,” ---நாலடியார்.

 வறுமையால் வருத்தமுற்ற ஒருவன் தன் மனத்தில் நிலைப்படுத்திய நல்லறிவை நீக்கி, இழிவான நிலையில்  ஒரு செல்வனை நாடி, எனக்கு ஏதாகிலும் கொடு என்று இரக்கவும் செல்வனோ இல்லை என மறுத்துவிட்டால் அவ்விடத்திலேயே இரந்தவன்  மனமழிந்து, இறந்து போக மாட்டானா..?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக