செவ்வாய், 25 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1086


திருக்குறள் -சிறப்புரை :1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். ---- ௧0௮௬

கண்ணழகைக் கூட்டிக் காதல் குறிப்புணர்த்தும் வளைந்த புருவங்கள் வளையாமல் நேரே மறைத்துநின்றால், இவளின் கண்கள் எனக்கு நடுக்கத்தைத் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா.

“கண் கயல் என்னும் கருத்தினால் காதலி
பின் சென்றது அம்ம சிறுசிரல் –பின் சென்று
மூக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து. “ ---நாலடியார்.

தன் தலைவியினுடைய கண்களை மீன் என்று நினைத்துச் சிச்சிலிக்    (மீன் கொத்தி) குருவிகள் பின் சென்று பிடிக்க முயன்றும் மேலிருக்கும் வளைந்த புருவத்தை வில் என்று  நினைத்துப் பிடியாமல் நின்றன என்று தன் காதலியினுடைய அழகை வியந்து தலைவன் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக