புதன், 26 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1087


திருக்குறள் -சிறப்புரை :1087

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். ---- ௧0௮௭

இவ்வழகியின் சாயாத இளமுலையின் மேல் அணியப்பட்டுள்ள துகிலானது, கொல்லும் மதம்பிடித்த யானையின்  முகத்திலிட்ட ‘முகப்படாம்’ என்னும் முகவணியை ஒத்திருக்கின்றது.

“ முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின
தலைமுடி சான்ற தந்தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு.

 அறிவினையுடைய இளைய மகளே…! நினக்கு முலைகள் அரும்பின ; விழுந்தெழுந்த கூரிய பற்கள் ஒளி கொண்டன ;  கூந்தல் முடித்தல் அமைந்தாய் ; குளிர்ச்சி பொருந்திய தழை உடை கொண்டாய் ஆதலின், நின் தோழியரோடு சுற்றித்திரிய எங்கணும் போகாதே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக