திங்கள், 18 மார்ச், 2019


திருக்குறள் -சிறப்புரை :1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். ------ ௧௧௬௭

காமமாகிய பெருங்கடலைக் கடக்க நீந்தி இன்னும் கரை காணாது தவிக்கிறேன்; ஊரே தூங்குகிறது, யான் ஒருத்தி மட்டுமே உறக்கமின்றிக் கிடக்கின்றேன்.

நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.” –குறுந்தொகை.

நள்ளிரவின் நடுக்கூறாகிய யாமப் பொழுது ; நள் என்ற ஓசை உடையதாக உள்ளது; மக்கள் பேச்சொழிந்து வெறுப்பின்றி இனிமையாக உறங்குகின்றனர். அகன்றஇடத்தையுடைய உலகில் உள்ள உயிர்களும் இனிது துயில்கின்றன ; உறுதியாக யான் ஒருத்தியே உறக்கமின்றித் தவிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக