புதன், 27 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1176


திருக்குறள் -சிறப்புரை :1176

ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. ---- ௧௧௭௬

 இக்காமமாகிய நோயைத்தந்த கண்கள், தாமும் துயிலாது துன்பத்தைத் துய்ப்பது, எமக்கு இனிதாக இருக்கின்றது.

முனிபடர் உழந்த பாடுஇல் உண்கண்
பனிகால் போழ்ந்து பணைஎழில் ஞெகிழ்தோள்
மெல்ல்லிய ஆகலின் மேவரத் திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னிய.” ----குறுந்தொகை.

மலைநாட்டின் தலைவன், நின்னைத் தழுவுவதற்கு முன்பு, பருத்து எழுச்சியுடையவாய் விளங்கிய நின்னுடைய தோள்கள், தன்னையே வெறுத்துக்கொள்ளும் அளவு துன்பத்தால் வருந்திய துயிலுதல் இல்லாத மையுண்ட கண்களில் வீழும் நீர்த்துளி, வாய்க்காலாய்க் கீறி ஒழுக, மென்மையுடையை யாதலால் நெகிழ்ந்தன.  இன்று அவை முன்பு பெண்பாலாகிய யானும் விரும்பும் வன்ணம் திரட்சியுற்று, நல்லன என்னும் பாராட்டுரையை நிலையாகப் பெற்றன என்றனள் தோழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக