வியாழன், 28 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1177


திருக்குறள் -சிறப்புரை :1177

உழந்துழந்து ண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். ----- ௧௧௭௭

அன்று விருப்பத்துடன் உளம் நெகிழ்ந்து, இடைவிடாது அவரைக் கண்ட கண்கள், இன்று  துயிலாது வருந்தி வருந்தி ; அழ  அழ,வீழும் கண்ணீர் அற்றுப்போகட்டும்.

கோடு உயர் பல்மலை இறந்தனர் ஆயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடைத்தெழு வெள்ளம் ஆகிய கண்ணே.” –ஐங்குறுநூறு.

தோழி..!  நம் காதலர் கோடு உயர்ந்த பல மலைகளையும் கடந்து பொருளீட்டச் சென்றாராயினும் அவர் விரைந்து வருகுவர். நீ அவரையே எப்பொழுதும் நினைத்தலால், நீ, துடைக்க துடைக்க நில்லாது, அடைக்குந்தொறும் அணையை உடைத்துக்கொண்டு பெருவெள்ளம் போலப் பெருகும் நின் கண்ணீர் அவரை மேலும் அவர் சென்ற நாட்டில் தங்கவிடுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக