வெள்ளி, 29 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1178


திருக்குறள் -சிறப்புரை :1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.----- ௧௧௭௮

காதலர் மனத்தால் விருப்பம் கொள்ளாமல்  உதட்டளவில் சொல்லால் மட்டுமே நம்மை விரும்பியவராக இவ்விடத்தே உள்ளார்; அப்படியிருந்தும் அவரைக் காணாது கண்கள் துயில மறுக்கின்றனவே.

துனிநீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
 இன்னாது அன்றே அவர் இல் ஊரே.” ---நற்றிணை.

தலைவர் ஊடலைத்தீர்த்துக் கூடி  இன்புற என்னிடன் வாரார் . ஆயினும் முன்பு, பலமுறை அவர் மேனியை நோக்கி மகிழ்ந்துள்ளேன். அவ்வாறு அவருடைய அழகைக்கண்டு  உயிருடன் வாழ்தல் இனியதாகும்.  இப்பொழுது அங்ஙனம் காண்கிலேனே ; கண்ணில் விழும் நுண்ணிய துகளையும் கை விலக்குவதைப்போல, நாம் கொண்ட துன்பத்தைத் தலைவர் நீக்காமல் போயினும் அவர் இல்லாத ஊர் துன்பத்தைச் செய்யும் ; இவ்வூரால் நேரும் பயன் என்ன..? ஏதுமில்லையே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக