வியாழன், 17 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –416: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –416: குறள் கூறும்பொருள்பெறுக


425

உலகம் தழீஇயது  ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.


அறிவு எனப்படுவது, உலகத்தைத் தன்வயப்படுத்துவதாக அமைதலாம் ; அவ்வாறான ஆற்றலுடைய அறிவு.    மங்குவதும் இல்லை மறைவதும் இல்லை ; எக்காலத்தும்  நிலைத்த தன்மை உடையதாம்.


தேவர்குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர்தமிழும் முன்மொழியும்- கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்.-நல்வழி, 40.


திருவள்ளுவர் அருளிய திருக்குறளும்  நான் மறைகளின் கருத்துகளும் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் அருளிய தேவாரம், திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இறைநெறி நூல்களும் திருமூலர் அருளிய திருமந்திரமும் என அனைத்தும் ஒப்புயர்வற்ற ஒரு பொருளையே உணர்த்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக