வியாழன், 24 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –420: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –420: குறள் கூறும்பொருள்பெறுக

463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.


மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க செயல்களைச் செய்வாரை, அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.


அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்

  பிறிதினால் மாண்டது எவனாம்…”பழமொழி, 271.


அறிவினால் பெருமை பெறாத ஒருவன், பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக