வெள்ளி, 25 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –421: சிவனைத் தமிழால் வழிபடு....!

சிவனைத் தமிழால் வழிபடு....!

வில்வம் அறுக்குக்கு ஒவ்வா மென்மலர்கள் நால்வர் எனும்

நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான் மறைகள் மெல்லிய நல்லாய்

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்தரற்கு என்றே சொல்.” –நீதி வெண்பா.

சோமசுந்தரக் கடவுளுக்கு எல்லா மலர்களுமே வில்வத்திற்கும் அறுக்குக்கும் இணையாக மாட்டா ; ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இயற்றிய தேவார திருவாசகங்களுக்கு இணையாக மாட்டா; மந்திரம் எதுவும் திரு ஐந்தெழுத்திற்கு (நமசிவாயா) ஒப்பாகா. எனவே வில்வமும் அறுகும் கொண்டு வழிபாடு செய்து தேவார திருவாசகங்கள் ஓதி, ஐந்தெழுத்தை நினைந்து இறைவணை வணங்குதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக