வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 15
   – மாவீரன் நல்லியக் கோடன்
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்து
அஞ்சினார்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்து
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்
அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த
அறிவு மடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்து
பல்மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 207   – 220
சான்றோர்,நல்லியக்கோடனின் செய்ந்நன்றி அறிதல்முதலான நற்குணங்களைப் புகழ்ந்துரைப்பர்.
வாள் வலியால் பெற்ற ஆண்மைச் சிறப்பினையும் ; மகளிரைத் தலையளித்துப் பாதுகாத்தலையும் ; தம்மை நாடி வருபவர்களுக்கு வரையாது வழங்குதலையும் போற்றியுரைப்பர்.
பல்மீன் நடுவே ஒளிரும் பால்மதி போலும் விளங்குபவன் நல்லியக்கோடன்

1 கருத்து: