வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 318

திருக்குறள் – சிறப்புரை : 318
மன்னுயிர் போற்று
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். – 318
தன் உயிருக்குப் பிறர் துன்பம் செய்தபோது அத்துன்பத்தை உணர்ந்து வருந்தும் அறிவுடைய ஒருவன் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்வது யாது கருதியோ  ..?

எல்லா உயிர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றேயன்றோ..!

2 கருத்துகள்: