புதன், 31 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 343

திருக்குறள் – சிறப்புரை : 343
ஐந்தடக்கல்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
 வேண்டிய எல்லாம் ஒருங்கு. – 343
துன்பங்கள் ஒழிய துறவறம் நாடின் ஐம்புலன்கள் வழி நுகரப்படும் சுவைகளை  (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்) வெறுத்து ஒதுக்கவேண்டும் ;  இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டுவன அனைத்தையும்  ஒருசேர விட்டொழிக்க வேண்டும்.
பற்றற்ற நிலை எய்த…. பற்றிய எல்லாவற்றையும் முற்றாக விட்டொழி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக