ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 334

திருக்குறள் – சிறப்புரை : 334
நாள் - வாள்
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின். – 334
நிலையாமையின் மெய்ப்பொருளை உணர்ந்து, நாள் என்பது நேற்று போல் இன்று ; இன்றுபோல் நாளை எனக் காட்டினாலும், அஃது உண்மையில்  உயிரை அறுத்துக்கொண்டிருக்கும் வாள் என்பதை உணர்தல் வேண்டும்.
“ வைகல் தோறும் இன்பமும் இளமையும்

  எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து” – (நற்றிணை, 46.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக