செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 342

திருக்குறள் – சிறப்புரை : 342
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. – 342
முற்றாகப் பற்றற்ற நிலையில் இவ்வுலக வாழ்க்கையில்  அஃதாவது இம்மையில் கிடைக்கும் இன்பங்கள் பலவாம் ; அந்நிலை அடைய வேண்டின் ஆசைகளைத் துறந்துவிடுக.
இல்லறக் கடமைகளை இளைஞர்களுக்குக் கொடுத்துவிட்டு – முதுமையில் மன அமைதியாகிய இன்பம் அடைக. 

1 கருத்து: