புதன், 10 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 323

திருக்குறள் – சிறப்புரை : 323
அறமுதல்…
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. -323
அறங்களுள் தலைமைத் தகுதி என்னும் சிறப்புக்குரிய அறம் கொல்லாமையே,இதற்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புடைய அறம் பொய்யாமையே.
அறங்களுள் முதலிடம் கொல்லாமை ; இரண்டாமிடம் பொய்யாமை.

பொய்மையும் வாய்மை இடத்து நிற்கும் … கொலைத் தொழில்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக