ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 327

திருக்குறள் – சிறப்புரை : 327
செய்யற்க…
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. – 327
தன் இன்னுயிர் நீங்கும் காலம் வந்துற்றபோதும் அதனைக் காத்துக் கொள்வதற்காகக்கூடப் பிற ஓர் இனிய உயிரைக் கொல்லுதலைச் செய்யாதே.
இன்னுயிர் என்றது தன்னுடன் இனிது இயைந்து வாழும் உயிரினங்களை. 

1 கருத்து: