சனி, 27 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 340

திருக்குறள் – சிறப்புரை : 340
நிலையில்லா உடம்பு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. – 340
 நிலையில்லாத உடம்பைத் தனக்கு ஒதுக்கிடமாகக்கொண்டு உறைந்து செல்லும் உயிர்க்கு  நிலையாகத் தங்குவதற்குரிய ஒரு வீடு அமையவில்லை போலும். ஒருபொழுது இருந்த உயிர் மறுபொழுது இல்லையே.
“ காடு முன்னினரே நாடு கொண்டோரும்

  நினக்கும் வருதல் வைகல் அற்றே” – (புறநானூறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக