செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 336

திருக்குறள் – சிறப்புரை : 336
பெருமை
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. – 336
நேற்று இருந்தவன் இன்று இல்லை ; உடலைவிட்டு உயிர் பிரியும் காலத்தை யார் அறிவார்..? நிலைத்திருப்பது  என்று எதுவுமில்லை  என்னும் பெருமையைக் கொண்டுள்ளது இவ்வுலகு .
மாற்றம் – இயற்கையின் இடையறாத பணி.
“ முக் காலைக் கொட்டினுள் மூடித் தீக் கொண்டு எழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. ”  - (நாலடியார்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக