சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 333

திருக்குறள் – சிறப்புரை : 333
சிறுமை பயக்கும்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். – 333
ஓரிடத்து நிலைத்து நிற்கும் இயல்பில்லாதது செல்வம், அவ்வியல்புடைய செல்வத்தைப் பெற்றால்,  அப்பொழுதே தம் பெயர் விளங்க,  நிலைத்து நிற்கும் நற்செயல்களைச் செய்தல் வேண்டும்.
“ செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” ( புறநானூறு, 189.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக