வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 339

திருக்குறள் – சிறப்புரை : 339
பிறப்பும் இறப்பும்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. – 339
உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் இயற்கைநிகழ்வே ; உறங்குவதும் விழிப்பதும் அவ்வாறே. உறங்குவதுபோலும் சாக்காடு ; உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு மாறிமாறி நிகழ்தல் இயல்பாதலின் நிலையாமை  உணர்த்தினாரென்க.
“  பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்

   இறந்தார் என்கை இயல்பே” – (மணிமேகலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக