திங்கள், 15 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 328

திருக்குறள் – சிறப்புரை : 328
இழிவான ஆக்கம்
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. – 328
 உயிர்க் கொலை புரிவதால் செல்வ வளம் பெருகி, நன்மை கிடைக்கும் என்றாலும்  தன்னுயிர்போல் பிற உயிர்களையும் போற்றும் மனம் உடைய மனிதர்கள், அக்கொலைத்தொழிலால்  பெருகிய செல்வத்தை இழிவாகவே கருதுவார்கள்.

குருதிக் கறை படிந்த செல்வம் தலைமுறையையும் தவிக்கவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக