சனி, 18 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :463

திருக்குறள் – சிறப்புரை :463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.----- ௪௬௩
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க செயல்களைச் செய்வாரை அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
  பிறிதினால் மாண்டது எவனாம்…” – பழமொழி.
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.


1 கருத்து:

  1. ஒவ்வொரு நாளும் முத்தான கருத்துக்களைக் கொண்டுவரும் உங்கள் பதிவு. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு