வியாழன், 23 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :468



 திருக்குறள் – சிறப்புரை :468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். ---- ௪௬௮
ஆராய்ந்து வழிவகுத்துத் தொடங்கப்படாத எந்த ஒரு செயலும் நிறைவேறாது, பலர் முன்னின்று ஊக்கினும் அச்செயல் அரைகுறையாகவே நின்றுபோகும்
“ இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
  அசையாது நிற்பதாம் ஆண்மை…. :” நாலடியார்.
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம். 

1 கருத்து:

  1. திருக்குறளில் பொதுமையாக உள்ளது. ஆனால் நாலடியாரில் ஆண்மைக்கு அழகு என்றுள்ளதே. (அங்கு பெண்மை சேர்க்கப்படவில்லையா, அல்லது ஆண்மை என்பது பொது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா)இரண்டும் பொருந்தி வருவதாகக் கூறமுடியுமா? தெளிவிற்காகக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு