புதன், 19 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :520

திருக்குறள் – சிறப்புரை :520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. ----  ௨0
அரசன் ஆணையைச் செயல்படுத்தும் வினைஞன் மனம் கோணாது செயல்படுவானாயின் மக்களும் கவலையின்றி வாழ்வர் ஆகையால் மன்னன் நாள்தோறும் அவன் செயல் முறைகளை ஆராய்ந்து அறிதல் வேண்டும்.
“ நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும். ----- குறள். 553
நாள்தோறும் தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து  முறை செய்யாத அரசன், நாள்தோறும் சிறிது சிறிதாக தன் நாட்டை இழந்து கெடுவான்.

.

1 கருத்து: