வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :529

திருக்குறள் – சிறப்புரை :529
தமராகித் தற்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். ----
  தமக்குச் சுற்றமாக இருந்தவர் தம்மைவிட்டு நீங்கிச் சென்றாராயினும் பின்னர் அவ்வருத்தம் நீங்கித் தாமேவந்து கூடிக்கொள்வர். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே.”
” பைஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
 செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
 பெய்யாது எனினும் மழை.” – பழமொழி.

பாம்பின் படம் ஒத்த அகன்ற அல்குலையும் பொன் வளையலையும் உடையாய்,  மழை பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும் அதுபோல, எப்பொழுதும் எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உற்ற நேரத்தில் உறவினரே உதவி செய்ய வல்லார்.

1 கருத்து: