வியாழன், 3 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 610

திருக்குறள் – சிறப்புரை : 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.---- ௬௧0
இறைவன் தன் அடியால் அளந்த உலகம் முழுவதையும் சோம்பலே இல்லாத ஆற்றலுடைய மன்னன்  ஒருசேர அடைதலும் கூடும்.
“ வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை …..” ----தொல்காப்பியம்.
காட்டாற்று வெள்ளம் போல் படையெடுத்துவந்த பகைவரை கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமையுடையவன்.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக