வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 624

திருக்குறள் – சிறப்புரை : 624
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.  ---- ௬௨௪
பொதி ஏற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் காளைகள் வழியில் ஏற்படும் தடைகளைக் கடக்க, முண்டியிழுத்து மேலேறுவதைப் போல, உள்ளத்தில் உறுதிப்பாடு உடையவனிடத்து வந்த துன்பமானது மேலும் துன்பப்படும்.
“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.” – முதுமொழிக்காஞ்சி.
 வரும் துன்பங்களை முயற்சியால் தாங்குவார்க்கு இன்பம் எளிதாகக் கிடைக்கும்.


1 கருத்து: