வியாழன், 31 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 638

திருக்குறள் – சிறப்புரை : 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
 உழையிருந்தான் கூறல் கடன். ----- ௬௩௮
அரசன், அறிந்து சொல்பவர்தம் அறிவுரையை அழித்து, தானும் ஏதும் அறியான் என்ற நிலையில், அரசனின் அக்குற்றங்களை நீக்கி உறுதியானவற்றை எடுத்துக்கூறல் அமைச்சனின் கடமையாகும்..
” கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல் அசைவுஇல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர் மன்ற இம்மண்கெழு ஞாலம்.” --- பதிற்றுப்பத்து.

பகைவருடைய கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தே..!  , நின்  முன்னோர் நின்னைப்போல் மாறுதல் இல்லாத கொள்கை உடையவர் ஆதலால், நடுக்கமில்லாமல் இம்மண்ணுலகை ஆண்டனர்.

1 கருத்து: