செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 622

திருக்குறள் – சிறப்புரை : 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். --- ௬௨௨
வெள்ளம் போல் கடுகிவரும் துன்பத்தை அறிவுடையவன் அதன் இயல்பறிந்து எதிர்கொண்டு தன் உள்ளத்தின் உறுதியால் துன்பத்தைத் துடைத்தெறிவான். துன்பத்தைத் துடைத்தெறிய துணிவு இல்லையேல் துன்பத்தால் உடனிருப்போரும் துயருறுவர்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் ….” –பழமொழி.

அறிவினால் பெருமை பெறாத ஒருவன், பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக