செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 615

திருக்குறள் – சிறப்புரை : 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். --- ௬௧௫
 ஒருவன் தான் மேற்கொண்ட செயலைச் செய்துமுடிக்க முயற்சிஉடையவன் இன்பம் துய்ப்பதில் நாட்டம் கொள்ளாமல் தன் சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போல் விளங்குவான்.
“கட்டு இலா மூதூர் உறைவு இன்னா.” –இன்னாநாற்பது.

சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக