சனி, 19 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 626

திருக்குறள் – சிறப்புரை : 626
அற்றேமென்று அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். --- ௬௨௬
பொருளைப் பெற்றபோது அதனைப் பாதுகாத்து வைக்கத் தெரியாது இழந்தவர்கள் பொருளை இழந்துவிட்டோம் என்று துன்பப்படுவார்களோ ?
( படமாட்டார்கள்)
” அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகித்

தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்.” – மலைபடுகடாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக