சனி, 12 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 619

திருக்குறள் – சிறப்புரை : 619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். ---- ௬௧௯
ஒரு செயல்,தெய்வத்தின் துணையோடு முயற்சி செய்து முடியாமல் போனாலும் அச்செயலைச் செய்து முடிப்பதற்குச் செய்த கடின உடல் உழைப்புக்கு, உரிய பலனைத் தரும்.
“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை
 கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.

அறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள். 

1 கருத்து: