ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 620

திருக்குறள் – சிறப்புரை : 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். --- ௬௨0
மனம் தளராது எடுத்துக்கொண்ட செயலை முடிக்கக் கடுமையாக முயற்சி செய்பவர் விதிப்பயனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி காண்பர்.’ விதியை மதியால் வெல்லலாம்.’
“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை
 கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.
அறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக