வியாழன், 10 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 617

திருக்குறள் – சிறப்புரை : 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். --- ௬௧௭
  தூங்கிவழியும் சோம்பேறியிடம் கரிய மூதேவி குடியிருப்பாள் ;  சோம்பலின்றி முயற்சி உடையவனிடத்தில் திருமகள் (சீதேவி) தங்கியிருப்பாள் என்று அறிவிற்சிறந்தோர் கூறுவர். சோம்பேறியை ’விடியாமூஞ்சி.’ என்பர்.
“ தீதும் நன்றும் பிறர்தர வாரா
 நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”--- புறநானூறு.

நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ;  துன்பம் நேர்தலும் அது தீர்தலும்கூட நம்மால் விளைவதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக