சனி, 26 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 633

திருக்குறள் – சிறப்புரை : 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. ---- ௬௩௩
பகைவருக்குத் துணையாக நிற்பவரைப் பிரித்தலும் தமக்குத் துணையாகவரும் மாற்றாரைப் பாதுகாத்தலும் பிரிந்து சென்றாரைச் சேர்த்துக் கொள்ளலும் ஆகிய இவைகளை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவனே அமைச்சனாவான்.
”மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
 சென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக