திங்கள், 7 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 614

திருக்குறள் – சிறப்புரை : 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். --- ௬௧௪
உழைத்துப் பொருளீட்டும் முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவி செய்வான் என்பது  இயல்பாகவே அஞ்சி ஒடுங்கும் தன்மை உடைய பேடி தன் கையில் வாள் கொண்டு ஆளும் தன்மை போலப் பயன் அளிக்காமல் போகும்.
”ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் …” – குறுந்தொகை.

இரவலர்க்குக் கொடுத்தலும் ஈதலால் பெறுகின்ற இன்பமும் வறியவர்க்கு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக