திங்கள், 14 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 621

திருக்குறள் – சிறப்புரை : 621
இடுக்கண் அழியாமை – 63
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அதுத்தூர்வது அஃதொப்பது இல். ---  ௬௨௧
வாழ்க்கை ஒரு போராட்டக் களமே. துன்பம் நேரும்போது துவண்டு விடாமல் அத் துன்பத்தை எதிர்த்து வெற்றிகொள்ள மகிழ்ச்சியுடன் மனத்துணிவு கொள்ளவேண்டும்.
அம்மகிழ்ச்சியைத்தவிரத் துன்பத்தை எதிர்கொள்ள தக்க துணை வேறொன்றும் இல்லை.
“ நல்லறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே.” – புறநானூறு.

நல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றாராயினும் அவ்வறுமை பெருமைக்குரியது ; அதனை யாம் மகிழ்ந்து மிகவும் போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக