வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 632

திருக்குறள் – சிறப்புரை : 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அரசு. ---- ௬௩௨
அறிவுரை கூற அஞ்சாமை, நற்குடிப்பெருமையக் காத்தல், நீதிநெறி நூல்களைக்கற்றல் ஆற்றும் வினையறிதல் ,  திறம்படச் செயலாற்றல் ஆகிய இவ்வைந்தும் சிறப்பாக வாய்க்கப்பெற்றவனே அமைச்சனாவான்.
மாண்டது அரசு என்றதனால் இக்குறட்பாவை அரசுக்குரிய இலக்கணமாகக் கொள்ளல் நன்றாம்.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
  நன்று அறி உள்ளத்துச் சான்றோர். – பதிற்றுப்பத்து.
மக்களினத்தைக் காப்பதற்குரிய் அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக