வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 611

திருக்குறள் – சிறப்புரை : 611
ஆள்வினை உடைமை - 62
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். ---- ௬௧௧
ஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பது கடினமானது என்று மனம் தளராது முயற்சி செய்க ;அச்செய்லைச் செய்து முடிக்கும் பெருமையை  மேற்கொள்ளும் முயற்சியே தரும்.
“ இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம் அல்லேம் …..” – பதிற்றுப்பத்து.

இன்றைக்கு இனிதாக உண்டோம் என்றால் நாளைக்கு அரைத்த மண்ணால் கட்டப்பட்ட கோட்டையை உடைய மதிலை வென்று எடுக்காமல் உணவு உண்ண மாட்டோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக