புதன், 16 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 623

திருக்குறள் – சிறப்புரை : 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர், ---- ௬௨௩
துன்பத்திற்குக் கட்டுண்டு துன்பப்படாதவர்கள் ; துன்பமே துன்புறுமாறு துணிந்து செயலாற்றி வெற்றி காண்பார்கள்.
” சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
 இன்னாது என்றலும் இலமே … “ புறநானூறு.

சாதலும் புதுதில்லை; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும் இல்லை ; வெறுப்பு வந்தவிடத்துத் துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக