திங்கள், 5 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1041


திருக்குறள் -சிறப்புரை :1041

105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. ---- ௧0௪௧

வறுமையைப்போல் கொடுமையானது யாதென்றால், வறுமையைப்போல் கொடியது வறுமையே..!
வறுமையின் கொடுமைக்கு இணையாக வேறொரு  கொடுமையைச் சொல்ல முடியாது.

”அரிது மன்றம்ம இன்மையது இளிவே…” ---நற்றிணை.

வறுமையால் வரும் இழிவு கொடுமையிலும் கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக