புதன், 28 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1060


திருக்குறள் -சிறப்புரை :1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. ---- ௧0௬0

இரந்து வாழ்பவர் சினங்கொள்ளக்கூடாது, வேண்டியது கிடைக்கும்வரை பொறுமை காத்தல் வேண்டும். இரந்து வாழும் இழிநிலைக்குத் தம் வறுமை நிலையே போதிய சான்று என்று உணரவேண்டும்.

“யாங்கு அறிந்தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென் பேணித்
தினை அனைத்தாயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே” –புறநானூறு.

வேந்தன், என்னுடைய எத்தன்மையை அறிந்தான்..? என்னை அழைத்துக் காணாமல் தந்த இப்பொருளுக்கு யான் பொன் பொருளை மட்டுமே கருதும் பரிசிலன் இல்லை. பரிசில் வேண்டுவாரின் கல்வி முதலிய தகுதியின் அளவு அறிந்து விருப்பத்தோடு தினை அளவு கொடுத்தாலும் போதுமெனக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக