வெள்ளி, 9 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1045


திருக்குறள் -சிறப்புரை :1045

நல்குரவு  என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். --- ௧0௪

வறுமை என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்துள் , பசி, பிணி, இழிசொல், பழிச்சொல் போன்ற இன்னபிற துன்பங்களும் வந்துசேரும்.

” இல் உணாத் துறத்தலின் இல் மறைந்து உறையும்
 புல் உளைக் குடுமிப் புதல்வன் பல்மாண்
பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனளாகி……” -----புறநானூறு.

எனது இல்லம் உண்ணப் படுவனவற்றைக் கைவிடுதலால், அவ்வில்லத்தை இகழ்ந்து நினையாது உறைகின்றாள் ; புல்லிய உளை மயிர் போலும் குடுமியையையுடைய இளம் புதல்வன் பலபடியாகப் பால் இல்லாத வறிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி, உள்ளே ஒன்றிமில்லாத வறிய சோற்றடு கலத்தைத் திறந்து பார்த்து, அங்கே உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அதனைப் பார்த்து அவன் அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலாவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது மிகவும் வருந்தினாள் என் மனைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக