செவ்வாய், 27 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1059


திருக்குறள் -சிறப்புரை :1059

ஈர்வார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.----- ௧0

  வறுமையால் வாடி,  இரந்து பொருள் கேட்பார் உலகில் இல்லையானால் கொடுப்போர்க்குப் பெருமை எப்படிக் கிடைக்கும்..? இரப்பார்க்குக் கொடுப்போரே பெருமை பெறுவர் என்பதாம்.

” ……………. இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரிலும்
உள்ளி வருநர் நசை இழப்போரே.
அனையையும் அல்லை நீயே…” ---புறநானூறு.

இயற்றப்பட்ட தேரை உடைய அண்ணலே..! தம் இல்லாமையைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பொருளைத் தேடி அடைய முடியாத இரப்போரைவிட, அவரால் பரிசிலுக்காக நினைந்து எய்தப்பெறும் கொடையாளிகள், அவ்விரப்போரால் விரும்பப்படும் புகழை இழந்துவிடுவர். நீ அவ்வாறு இரப்போரால் விரும்பப்படாத தன்மையை அடைபவன் அல்லன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக